ஈராக்கில் மூன்று தினங்களுக்கு துக்க தினம்

455 0

391080_Iraq-bomb-attackஈராக்கில் 3 தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளது.
சம்பத்தில் 145 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து, நிலமைகளை அவதானிக்க அந்த நாட்டு பிரதமர் அங்கு விஜயம் செய்த நிலையில், அவரது வாகன தொடரணி மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், இந்த தாக்குதலில் பிரதமர் உயிர் தப்பினார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பதிவேற்றத்தினூடாக தாமே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளனர்.
இதேளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அழிவுக்காலம் தொலைவில் இல்லை என்றும் ஈராக்கிய பிரதமர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment