சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும் மற்றும் மூன்றாயிரம் கிலோ உளுந்து தொகையுடன் 7 லொறிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் வாகன தரிப்பிடம் ஒன்றில் சுமார் 40 அடி நீளம் கொண்ட மூன்று கொள்கலன் பாரவூர்திகளில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மொஹமட் ரிஸ்வி என்ற நபரொருவர் உள்ளிட்ட 10 பேர் புளுமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டவிரோத மஞ்சள் மற்றும் ஏனைய பொருட்கள் டுபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னா் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மட்டக்குளி பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரால் குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

