முருகண்டியில் கோரவிபத்து : 14 பேர் படுகாயம்!!

278 0

acc3-1முருகண்டியில் இன்று(29) இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பதினான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் மினிபஸ் ஒன்று இன்று(29) காலை கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த வேளையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், தனியார் மினிபஸ்சில் பயணித்த பத்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கலாக பதின்நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதில் படுகாயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.