ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ராஜித

195 0

வாக்குமூலம் வழங்குவதற்காக, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் இன்று காலை அங்கு முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னர் பல்வேறு தடவைகள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.