இந்த நிலையில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் திருவாரூர் நகர் பகுதிகளில் ‘குளத்தை காணவில்லை’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி மக்கள் ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் செட்டிகுளம் இருந்து வந்தது. இதன் மூலமாக இந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு மட்டுமன்றி குடிநீர் தேவைக்கும் இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு முழுவதுமாக பொது பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மீண்டும் அந்த இடத்தில் குளத்தை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று திருவாரூர் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்டெடுத்து நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாரூர் நகரி்ல் குளத்தை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூரில் ‘குளத்தை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.