குமாரபுரம் கொலை வழக்கு விசாரணை இன்று

529 0

firekillதிருகோணமலை மாவட்டத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்ற குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறுவுள்ளது.
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை 20 வருடங்களின் பின்னர் இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது.
இந்த வழக்கு விசாரணையில் இதுவரையில் 14 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
1996ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 2 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை வழக்கில் தெகியத்த இராணு முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment