பெக்கோ இயந்திரம் ஒன்று கவிழ்ந்தில் நபர் ஒருவர் பலி

278 0

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான – தபோதாரகம வீதியில் பெக்கோ இயந்திரம் ஒன்று கவிழ்ந்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (02) பிற்பகல் குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெக்கோ இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பின்நோக்கி சென்று கவிழ்ந்துள்ளது.

விபத்தில் பெக்போவில் பயணித்த மூவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 37 வயதுடைய ஒருவரே உயிரிழநி்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.