அமெரிக்காவின் தடைகள் காரணமாக தனது திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கொழும்புபோர்ட் சிட்டி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தடைகளால் தங்களுக்கான நிதிகள் கிடைப்பது தடைப்படவில்லை என போர்ட்சிட்டியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்சீன கடல்பகுதியில் சர்ச்சைக்குரிய கட்டுமானபணிகளில் ஈடுபட்டுள்ள சீனாவி;ன் சிசிசிசி நிறுவனத்திற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளமை ஆசியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் பிலிப்பைன்சிலும் இந்த நிறுவனம் ஆழமான பிரசன்னத்தை கொண்டுள்ளது.

