கிளிநொச்சியில் மாதிரி வீட்டுத் திட்டம்

459 0

1467531729_download (9)கிளிநொச்சியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளை நிர்மானிப்பதற்கான விசேட வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
யுத்தத்தின்போது தாம் உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அவை அனைத்தையும் மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறித்த வீடமைப்பு திட்டத்தினை வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிற்கும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 300 பயனாளிகளிற்கு வீட்டுக்கடன் காசோலைகள் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.

Leave a comment