சிறிலங்காவில் துப்பாக்கிதாரி சுட்டுச் கொலை

257 0

சிறிலங்காவில் உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

´சமியா´ என்ற சமிந்த எதிரிசூரிய என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பகுதியில் வைத்து அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், ´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.