செல்வச்சந்நிதி ஆலயத்தில் தொற்றுநீக்கல் செய்த அதிகாரிகள்

323 0

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் தற்போது நாட்டிலுள்ள கொரோணா தொற்று அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடை வெளியினை பேணி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலயத்தில் உற்சவ காலத்தில் நாட்டின் அனைத்துப் பகுதியிலுமிருந்து அடியவர்கள் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் நிலையில் ஆலயப் பகுதியில் கொரோணா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகரசபையின் சுகாதார பிரிவினரால் ஆலய பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடானது இரவு வேளைகளில் ஆலயத்தின் உட்புறம் மற்றும்வெளி வீதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.