இறுதிக்கட்ட யுத்தத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெறவில்லை!

251 0

reginald-coorayஇறுதிக்கட்ட யுத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி கொள்ளவில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றியில் வேதனை, துன்பம் மற்றும் சோதனைகளே நிறைந்து காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கான வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று இராமநாதன் கல்லூரியில் மண்டபத்தில் நடைபெற்றது.

வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் செ.சந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிகாமம் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடந்த வருடம் சிறப்பாகச் செயற்பட்ட பாடசாலை அதிபருக்கு விருதி வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டு, கலை, கலாச்சாரம் போன்றவற்றில் சாதனை படைத்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், அனைத்து வளங்களும் அழிந்துவிட்டன. அவற்றை கல்வியின் ஊடாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனம் தெரிவித்துள்ளார்.