கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் 3ஆம் வருட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

278 0

9168467781071841852eastern-university1-415x260கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் மற்றும் 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதலாம் வருடத்தின் 16 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படுவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.

எனினும் இறுதியாண்டு மாணவர்கள் பரிட்சைக்கு சமூகளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவர்களின் பகிடிவதை சார் நடவடிக்கைகள் காரணமாக பேரவையின் முடிவுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமான இடைநிறுத்தப்படும் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.