சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.
இந்திய – சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனினும், சீனா இதனை மறுத்தது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இருதரப்பிலும் பதற்றம் தணியும் வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இதனால் எல்லையில் சற்று அமைதியான நிலை காணப்படுகிறது.