மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்(காணொளி)

316 0

sequence-01-still013மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட பாடசாலை மற்றும் கோவிலுக்கு சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் வலியுறுத்தியுள்ளார்.

வனஜீவராசிகள், காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.