போரில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கம் தடுக்க முடியாது-மங்கள சமரவீர

307 0

mangala-samaraweeraபோரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கத்தினால்;கூட தடுத்து நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற போரில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரும் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.