சிறிலங்காவில் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு திடீர் இடமாற்றம்

255 0

சிறிலங்கா-காலி- பூஸ்ஸ சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு உடனடியாக அமுழுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 7பேரும்  சிறையிலுள்ள பிரபல போதைபொருள் வர்த்தகர் வெள்ளே சுதாவுடன் தொடர்பினை பேணியதாக குற்றம்  சுமத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே, இவ்விடயத்தில் உண்மையான விபரங்கள் வெளியாகும் வரை இவ்வாறு 7பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.