சிறிலங்காவில் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பம்!

241 0

சிறிலங்காவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனே அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.