யாழில் வெள்ளை வேனில் இளம் யுவதி கடத்தல்

301 0

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளை வேனில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (09)  இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அத்துடன்,  வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.