தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது

273 0

ஆசனப்பட்டியல் ஆசனம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வழங்கப்படவுள்ளது என வெளியான அறிவிப்பு குறித்தே சித்தார்த்தன் இந்த கருத்தினை விடுத்துள்ளார்.

இது தமிழ்தேசிய கூட்டைமப்பில் அனைத்து தரப்பினரும் இணைந்து எடுத்த முடிவு இல்லை என குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.