குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து – 8 பேர் பரிதாப பலி

246 0

குஜராத் மாநிலத்தில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.
மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.