வாக்கு பெட்டிகளையும் சுமந்துள்ளேன்! -மஹிந்த தேசப்பிரிய

267 0

தாம் கலந்து கொள்ளும் இறுதி ஊடக சந்திப்பு இது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் ஆணையத்தில் மற்றொரு ஊடக சந்திப்பை நடத்த விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், குறித்த இடத் தில் மற்றொரு ஊடக சந்திப்பை நடத்த மாட்டேன் என இன்று இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்குத் தெரி வித்தார்.

அதன்படி, இந்தத் தேர்தலுக்குப் பிறகு பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது நான் பணியாற்றும் இறுதி தேர்தல், உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன். 37 ஆண்டுகள் நான் இங்கு பணியாற்றியுள்ளேன். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நான் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைந்தேன்.

1984 ஆம் ஆண்டுமுதல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள் ளேன், நான் இவ் ஆணைக்குழுவில் செய்யாத பணிகள் இல்லை, வாக்கு பெட்டிகளையும் சுமந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.