எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில்

393 0

59032பிரதேச எல்லை மீள்நிர்ணய அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பான குழுவின் தலைர் அசோக பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியினர் அவரை சந்திப்பதற்காக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அமைச்சர் பைசர் முஸ்தஃபாவை சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், எல்லை மீளமைப்பு குழுவின் தலைவர் அசோக்க பீரிஷையும் சந்தித்திருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்து அசோக பீரிஷ், எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை அடுத்த மாதம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.