கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

246 0

வவுனியாவில் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) நள்ளிரவு 12.20 மணியளவில் குறித்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.