விசேட தேவையுடைவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்-ஜனாதிபதி

297 0

presidentவிசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக கூறினார்.

இதுதொடர்பாக, பலவிதமான குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் அவற்றை பூரணப்படுத்தி விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

என்றும் அவர் தெரிவித்தார்.