மட்டு ரிதிதென்னை குளத்தில் தோணியில் சென்ற இருவர் தோணி கவிழ்ததில் ஒருவர் நீரில் ழுழ்கி உயிரிழப்பு

250 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்திஆயா குளத்தில் தமரைப்பூ பறிக்க இருவர் தோணியில்; சென்ற போது தோணி கவழிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி காணாமால் போயுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அவருடைய நண்பன் எஸ்.சுமன் என்பவருடன் திருப்பெருந்துறை காளி கோவில் உற்சவத்திற்கு தமரைப்பூ பறிப்பதற்காக சம்பவதினம் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்று ரிதிதென்னை ஜெயந்திஆயா குளத்தில் தோணி ஒன்றில் தமரைப்பூ பறிக்க குளத்தின் நடுப்பகுதிக்கு சென்ற நிலையில் தோணி கவிழ்ந்தததையடுத்து இருவரும் நீரில் முழு;கிய நிலையில் சுமன் நீந்தி தப்பி கரைசேர்ந்துள்ளார்.

அதேவேளை நீரில் மூழ்கிய நண்பனை தேடியபோதும் அவர் காணாமல் போயுள்ளதத். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்று காணாமல் போனவாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
4