சிங்களத்தில் கடிதம் வந்தால் கிழித்தெறிவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்

328 0

sivajilingamஇலங்கை மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு தொடர்ந்தும் தனிச்சிங்களத்தினில் வடமாகாணசபைக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போதே எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாணத்திலும் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி சிங்கள கடிதங்களை தமிழிலில் மொழிபெயர்த்து அனுப்பிவைக்காவிட்டால் எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.