சிறிலங்காவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

209 0
சிறிலங்காவில் வென்னப்புவ நகரில் 144 கிராம் 832 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான வென்னப்புவ, கடுநெரிய பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (13) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.