பொருளாதாரம் ஒரு நேர்மறையான குறிப்பில் முடிவடையும்

221 0

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரம் ஒரு நேர்மறையான குறிப்பில் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக சில திருத்தங்கள் ஏற்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இரண்டாவது, மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சியானது அரசாங்கத்தின் நாணய மற்றும் நிதிக் கொள்கைகளால் சாதகமான நிலையை அடையுமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.