மன்னார் – முசலி பிரசேத்தில் சிங்கள குடியேற்றம்

5048 0

MUSALI-MANNAR-300x225மன்னார் – முசலி பிரசேத்தில் மரமுந்திரிகை செய்யப்படும் 6 ஆயிரம் ஏக்கர் காணியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.
அங்குள்ள சிவில் சமுக அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன.
இந்த காணிப் பகுதியை சிங்கள படையினர் நிருவகிப்பதுடன், மரமுந்திரிகை செய்கையையும் மேற்கொண்டு லாபமடைகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த காணிப்பகுதியை விட்டு படையினர் வெளியேற வேண்டும் என்று சிவில் சமுக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Leave a comment