வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

420 0

pppppppppppppppppவலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசந்துறையை அண்மித்த பகுதியில் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அங்குள்ள எரிதிரவ நிலையம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தற்போது இராணுவத்தினர் அதனை சூழ சீமெந்து வேலி அமைத்து வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதி பொது மக்களின் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவம் எரிதிரவ நிலையத்தை மாத்திரம் கையகப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment