பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 மாடுகள் உயிரிழந்துள்ளன!

293 0

கிளிநொச்சி – பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 மாடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.  இந்த நிலையில், கிளிநொச்சி – பரந்தன் – ஏ 35 வீதியில் வௌிக்கண்டல் பகுதியில் டிப்பர் மோதி 18 மாடுகள் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளன.

விசுவமடு பகுதியிலிருந்து வேகமாகப் பயணித்த டிப்பர் வாகனம் வீதியில் சென்றுகொண்டிருந்த மாடுகள் மீது மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி பயணித்ததாக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.