ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை

306 0

1342596009eastஇனிவரும் நாட்களில் ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இவ் விடையம் குறித்து நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி வௌ்ளை நிறத்திலான சிகரட் பொதி அட்டைகளை அறிமுகப்படுத்துவதை விரைவு படுத்தவுள்ளதாகவும், சிகரட் கட்டுப்பாடு தொடர்பான 10 யோசனைகள் சுகாதார அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அத்தியாவசிய மருந்து வகைகள் 48ன் விலை குறைப்பு செயற்திட்டம் வெற்றியளி்த்துள்ளதாகவும் இக் கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது