இனவாத அரசின் கைகூலிகள் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவேண்டும் – துரைரெட்ணம்

327 0

அம்பாறை திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில்  பிரதிநிதிகளை குறைப்பதற்காக வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியிடுகின்ற இனவாத அரசின்  கைகூலிகள் இந்த தேர்தலில் இருந்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒதுங்கிக் கொள்ளவேண்டும் என  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற கரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற் ஊடகவியளாளர்  சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வடக்கு கிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான செயல்வடிவங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளாரா? கிழக்கு தொல்பொருள் செயலணியில் எந்த தமிழரையும் ஜனாதிபதி நியமிக்கவில்லை இந்த செயலானது கூடுதலாக பௌத்த ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான செயல்வடிவத்தை எடுத்துக் காட்டுகின்றது

எனவே இந்த செயலணியில் பெரும்பான்மையான பௌத்த மதத்தை சார்ந்த  இனரீதியான அதிகாரிகளை நியமித்ததன் காரணமாக தமிழ் மக்களுக்கு அவர்களிடம் எத்தவொரு நம்பிக்கையும் இல்லை.

30 வருட ஆயுத போராட்டம் மௌனிக்கப்படதன் பின்பு தமிழர்களுக்குரிய அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கே தமிழர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் வாக்குபலம். இந்த வாக்குப்பலத்தை ஒவ்வொரு தமிழர்களும் வாக்குச் சாவடிக்கு சென்று எழுபத்தைந்து  விகிதத்திற்கு மேல்  வாக்களித்துக் கொள்ள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கிழக்கு மாகாணசபைக்கு அனுபவமுள்ள தகைமையுள்ள பல தமிழ் அதிகாரிகள் இருக்கையில் அவர்களை நியமிக்காமல் பல அமைச்சுக்களிலும் அலுவலகங்களிலும் பொதுச்சேவை ஆணைக்குழு பொதுநிர்வாக அமைச்சு போன்றவற்றில் சிரேஷ்ட தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பது சிங்கள மேலாதிக்கத்தை அமுல்படுத்துவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எனவே ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில மூவின மக்களையும் சமனாக பார்ப்பீர்களானால் இன ஐக்கியத்தை பேணக்கூடியவராக இருந்திருந்தால் மூவின மக்களும் கிழக்கு மாகாணத்தில் ஐக்கியமாக வாழவேண்டுமாக இருந்தால் நிர்வாக ரீதியாக தெரிவு செய்யப்படுகின்ற அதிகாரிகள் விகிதாசார அடிப்படையிலும் திறமை அடிப்படையிலும் நியமனத்தை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.