சிறிலங்கா ஜிந்துபிட்டியில் கொரோனா நோயாளி அடையாளம் – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

334 0

சிறிலங்கா கொழும்பு -ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் வசிக்கும் 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அப்பகுதியின் பொதுச் சுகாதார சேவையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 8ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள அவரது வீட்டுக்குத் திரும்பியிருந்த நியைலில், அவரது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அந்த தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அப்பகுதியின் பொதுச் சுகாதார சேவையாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை சமூகப் பரவல் அல்லவென வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.