சிறிலங்காவில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 11 அதிகாரிகள் கைது

398 0

சிறிலங்காவில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 11 அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று (02) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் 4 அதிகாரிகள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். அப்பணியகத்தின் தலைவரையும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது