இனவாதிகளை கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு!

327 0

11149566_907380425995947_7239221491738492634_nபொலிஸ் திணைக்களத்தினால் விசேட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனங்களுக்கும் மதங்களும் இடையேயான நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் வகையில் இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தில் குற்றவியல் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த குழு மூலம் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.