தமிழகத்திலிருந்து 21 அகதிகள் தாயகம் திரும்பினர்!

311 0

e4bd662e7ba0549ddbf39da7fdde90a1_xlதமிழகத்திலிருந்து இன்று 21 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐநாவுக்கான அகதிகளுக்கான ஆணையகத்தினால் இன்று தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பியவர்கள் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் அனைவரும் தமது சொந்த மாவட்டத்திலேயே குடியேற்றப்படுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் 1990ஆம் ஆண்டு சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.