வல்வெட்டித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

211 0

வல்வெட்டித்துறைப்பகுதியில் கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று காலை ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஒருவர் ஈடுபடுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கஞ்சா போதைப் பொருளையும் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்