கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலம் மீட்பு

256 0

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று இன்று (30) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் – காரியப்பர் வீதி முஹம்மது ஹனிபா ஹாரிஸ் (60 வயது) எனத் தெரிய வருகின்றது.

கல்லடி – மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து தான் ஒருவரை கொலை செய்துள்ளதாக உடப்பு – தானஞ்சோலை 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயது நபரொருவர் வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான வயோதிபரின் சடலம் தற்பொழுது மூதூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.