கருணா விவகாரத்தில் எதனைசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிததுள்ளது.
கருணா தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து அவரது வேட்பு மனுவை இரத்துச்செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
கருணா என அழைக்கப்படும் விநாயகமூhத்தி முரளீதரன் குறித்து உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் தேர்தல் ஆணைக்குழு எதனையும் செய்ய முடியாத நிலையிலுள்ளது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கருணா சமீபத்தைய கருத்துக்கள் குறித்து சட்டஅமுலாக்கல் நடவடிக்கை எடுக்கலாம் விசாரணை செய்யலாம் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்