போயா தினங்களில் பிரத்தியேக கல்வி நிலையங்களை முற்றாக நிறுத்துவதற்கு பிரத்தியேக கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஞாயிறு தினங்களில் காலை வேளைகளில் நடத்தப்படும், பிரத்தியேக வகுப்புகளை நிறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை ஆராயவும் ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பிரத்தியேக வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் போது மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.