பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழு!

219 0

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பாடசாலைகளின் சுகாதார வைத்திய அதிகாரி நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 105 நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாடு பூராகவும் இன்று பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாணவர்களை தவிர ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர். பாடசாலையினை மீளச் சுத்திகரித்து கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒருவார காலம் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான செயற்பாடுகள் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும். முக்கியமாக கை சுகாதாரம், சமூக இடைவெளி போன்றவற்றுக்குரிய செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டும்.

மேலும், இதுகுறித்து ஆசிரியர்களுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும்போது அவர்கள் எவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது என்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறவுள்ளோம்.

இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு வரும்பொழுது முகக் கவசங்களை கட்டாயமாக அணிந்து வருவதுடன் பாடசாலை சுற்றாடலுக்கு பிரவேசிக்கும் முன்னர் பாடசாலையின் முன்பு வைக்கப்பட்டுள்ள கைகழுவும் இடத்திற்கு சென்று தமது கைகளினை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு மீற்றர் இடைவெளிக்கு அமைவாக பாடசாலைகளின் வகுப்பறைகளை அமைக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். குறிப்பாக இது நகர பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால் கிராமப்புற பாடசாலைகளில் முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.

பாடசாலைகளில் மாணவர்கள் சுகவீனமுற்றால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒரு தனி அறையும் அமைக்குமாறு நாங்கள் பாடசாலை அதிபரிடம் பரிந்துரை செய்துள்ளோம்.

அதேபோல், இந்த காலகட்டத்தில் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்பட மாட்டாது என்பதால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவினை வழங்கி பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுகின்றேன்.

மேலும், மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீரும் வீட்டிலிருந்து கொண்டுவருதல் வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து பாடசாலை மட்டத்தில் இந்த சுகாதார நடைமுறையினை கண்காணிப்பதற்காக விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த சுகாதாரக் குழுவினர் கிழமைக்கு ஒருமுறை பாடசாலைகளுக்கு விஜயம்செய்து பாடசாலையின் சுகாதாரம் தொடர்பாக அறிக்கைகளை எங்களுக்கு சமர்ப்பிப்பார்கள். இதைவிட மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர்கள் வா