மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று

218 0

மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக 100 என்ற அளவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது.