கிரிக்கெட் வீரர் சுரங்க லக்மாலுக்கு அபராதம்

337 0

suranga-lakmal-issueஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியின் பந்து வீச்சின் போது முறையற்ற ரீதியில் பந்து வீசிய குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியுடனான போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே இந்த தவறு இழைக்கப்பட்டுள்ளது.
சுரங்க லக்மாலின் போட்டி கட்டணத்திலிருந்து 50 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.