இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கைது

355 0

1721952539arres5இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து 2420 ரூபா பெறுமதியான மதுபான போத்தல் ஒன்றை பெற்றுக் கொள்ள சந்தேகநபர் முற்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மதவாச்சி பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் வைத்து சந்தேகநபரை, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.