வௌிநாடு செல்ல அனுமதி கோரும் பஷில் – மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

268 0

2072325921500தன்னை வௌிநாடு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 25ம் திகதி இது குறித்து தகவலளிக்குமாறு நீதிபதி சரோஜினி குஷலா வீரவர்த்தன சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை அரசியல் நடவடிக்கைக்கு பயன்படுத்தி நஸ்டம் ஏற்படுத்தியதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 26ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.