ஐந்து உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்ணீருடன் மயங்கி விழுந்த தாய்

232 0

ஐந்து உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்ணீருடன் மயங்கி விழுந்த தாய்

முல்லைத்தீவு -வள்ளிபுனம் பகுதியைச்சேர்ந்த தங்கவேல் சத்தியதேவி என்னும் தாயார் கடந்த இறுதியுத்த காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது ஐந்து உறவினர்களைத் தேடிவருகின்றார்.

இந் நிலையில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது தொடர் போராட்டத்தின் 1200ஆவது நாளான 20.06இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்த குறித்த சத்தியதேவி என்னும் தாயர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும்போது கதறிஅழுதபடியே மயங்கிவீழ்ந்தார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது,

எனது மருமகன் சின்னத்தம்பி – மகாலிங்கம், மகள் சிவாஜினி, பேரரப்பிள்ளைகளான மகிழினி, தமிழ்ஒளி, எழிலினி ஆகியோரை 2009.05.18ஆம் திகதி அன்று வட்டுவாகல் பகுதியில்வைத்து கையளித்திருந்தேன்.

தற்போது பதினொரு வருடங்கள் கடந்த நிலையிலும் தனித்திருந்து எனது உறவினர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

என்னிடம் எனது உறவினர்களைக் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்றாவாறு கதறி அழுதபடியே கண்ணீருடன் மயங்கிவீழ்ந்தார்