தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது!

222 0

இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக 7 பேர் கொண்ட குழு இளைஞரது வீடு தேடி மோட்டார் சைக்கிள்களில் நேற்று பிற்பகல் சென்றது. இதனை அறிந்த இளைஞனின் மூத்த சகோதரன், குறித்த குழுவை விரட்டிச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஒன்று நிலை குலைந்து வீதியில் விபத்துக்கு உள்ளாகியதால் இரண்டு பேர் சிக்கினர்.

குறித்த இளைஞர்கள் இருவரையும் தாக்கிய பின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இளைஞர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தப்பி ஓடிய மேலும் 5 பேர் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.