மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

391 0

kovinthan-krunakaramமட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைஅதிபர்எம்.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகாணவிவசாயஅமைச்சர்கி.துரைராஜசிங்கம் பிரதமஅதிதியாககலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்இ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும் கௌரவ அதிதியாக மட்டக்களப்புவலயகல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டிடத்திற்கானஅடிக்கல் நடும் நிகழ்வுஆசிரியர்கௌரவிப்புஇபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் கௌரவிப்புஎனமுப்பெருவிழாவாக இந்தநிகழ்வுநடைபெற்றது.

இதன்போது 11மி;ல்லியன் ரூபாசெலவில் கட்டப்படவுள்ள இரு மாடிக்கட்டிடத்திற்கானஅடிக்கல் நடப்பட்டதுடன் வெட்டுப்புள்ளிகளுக்குஅதிகமானபுள்ளிகளைப்பெற்றுசித்தியடைந்த இரு மாணவர்கள் உட்படநூறுபுள்ளிகளுக்குஅதிகமானபுள்ளிகளைப்பெற்றமாணவர்களும் இதன்போதுகௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்வித்துறைக்குஅரும்பணியாற்றியஅதிபர் மற்றும் ஆசிரியர்களும் இதன்போதுபாடசாலைசமூகத்தினால் கௌரவிக்கப்பட்டதுடன்இஅதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்……..